Friday, March 11, 2016

ஒரு நாள் பயணம்!! இது ஒரு தொடக்கம்!!

இந்த பயணம் ஒரு பொய்யில் ஆரம்பித்து இன்பச்சுற்றுலாவில் முடிந்தது
மெதுவாக தூண்டில் போட ஆரம்பித்தேன்
நீ எங்க இருப்ப?? ஆபீஸ் அட்ரஸ் என்ன??
எத்தன நாள் லீவ்??
டிரஸ் சைஸ் என்ன??
என்ன கலர் பிடிக்கும்??
 இப்படி பலப் பல கேள்விகள்
எண்ணற்ற உரையாடல்கள்
ஒரு வழியாக ஊர் வந்து சேர்த்தேன்!!
அப்படியும் சொல்ல மனமில்லை!!

கொஞ்சமாக ஒரு அதிர்ச்சி கலந்த
ஆர்ச்சர்யம் தர எண்ணினேன்!!

உடனே ஒரு போன் கால் தெரியாத நம்பரில் இருந்து
கொஞ்சம் மிரட்டினேன்!!
ஆசை வார்த்தை காட்டி அசைத்துப்ப் பார்த்தேன்!!

ம்ம்ஹும் ஒன்னும் இணங்க வில்லை
கள்ளத்தனம் போக ஆர்ச்சர்யம் நீக்கினேன்
எங்கு இருக்கிறேன் என்று கூறினேன்
ஆச்சர்யம் மறுமுனையில் சற்றே
கோபமும் கூட இதைத்தானே நான் எதிர் பார்த்தேன்!!

கோவப்பட்டால் தானே சமாதானம்
ஊடல் இருந்தால் தானே கூடல்!!
என்ன ஒரு குள்ள நரித்தனம்
சங்கேத வார்த்தைகள் முற்று பெறாத பேச்சு வார்த்தைகள்!!

இடியாப்ப சிக்களில் கொஞ்ச நேரம் ஹோட்டலில் சாப்பிட நேரம் கிடைத்தது!
 பர்கர் மற்றும் கூல் ட்ரிங்க்ஸ்!!
இப்படியாக இரண்டு நாட்கள் கழிந்தன!

திடீரென போய் வருகிறேன் எனவும் மறுமுனையில் அமைதி
சிறிது நொடியில் விசும்பல் சற்றே மனதை பிசைந்தது!!
அவளின் வாடிய குரலில் கரைந்து போனேன்
சரி பறக்கும் நேரத்தை சற்று மாற்றினால் என்ன ?
ஜோலி போனால் ?? என்ன செய்வது??
சரி உட்கார வைத்து சோறு போடா மாட்டாளா என்ன என்று ஒரு நம்பிக்கை
குறைந்தது ஒருவேளை ட்ரீட்டாவது கிடைக்காத??
முடிந்தது அத்துடன்.. போ மறுபடியும் சென்னை !!

2 நாள் சுற்றி 3ம் நாள் வந்து சேர்ந்தேன்
வருவதற்குள் அத்துணை கேள்வி..

ட்ரைன் ஏறியாச்சா? உட்கார்ந்தர்ச்சா
படுத்தாச்சா சாப்பிட்டாச்சா?? எத்துனை ஆச்சா

ஒரு வழியாக என் ஊர் வந்தது
உடனே ஒரு பயம் மற்றும் ஆர்வம் தொற்றிக்கொண்டது
ஏதோ இன்டர்நெட்டில் காதலியை பார்த்து முதலில் சந்திக்கும்
காட்டுபுரத்தான் போல
வழி நெடுக ஒரே கேள்வி ஏன் இந்த கூத்து
ஹை பை சொல்லிவிட்டு போய் விட வேண்டியது தானே??
இத்துணை அளவு செய்ய வேண்டுமா அப்படி என்ன முக்கியம்
இப்படி குழப்பம் மிகுந்த நேரத்தில் சரி எங்காவது வெளியே போய் வரலாம் என்று ஒரு கட்டளை(விண்ணப்பம்)

மறுபடியும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.. என்னடா இது சின்ன பொண்ணுக்கு உலகமே தெரியலையே!!!
நாம் ஒழுங்காக இருந்தாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் தொற்றிக் கொண்டது!!
சொல்ல மட்டும் இல்லை
மிடறு விழுங்கி ஒருவழியாகி ஒத்துக் கொண்டேன்
அடுத்த தலைவலி பைக்கில் தான் போக வேண்டும் என்று!!
கிழிந்தது கிருஷ்ணகிரி!!!
சரி சின்னக் கவுண்டர் மாதிரி வாக்கு கொடுத்தாகிவிட்டது!!

மறுபடியும் கழுதைக் கால் முளைத்த மாதிரி முன்னே பின்னே போனால் மானம் கப்பலேறி விடும்!!

சின்ன பொண்ணு நம்மை சில்லறைத்தனமாக நினைத்து விடுவாள்
என்று ஒரு கட்டளை இட்டேன்

என் தெரு தாண்டும் வரை நான் தான் வண்டி ஓட்டுவேன்
ஒரு ஓரப் பார்வை பார்த்தாலே பார்க்கணும்
இட்ஸ் ஓகே என்று பின் தட்டி கொண்டேன்

வண்டியை அவளிடம் கொடுத்து விட்டு நான் வேண்டாத தெய்வம் இல்லை
கடவுளே எமனிடம் வண்டியை கொடுத்து ஜாக்கிரதையாக ஓட்டச்சொன்னால்  எப்படி பொருந்தும்??
 சரி விடு ஊரு வந்து ஊரு விட்டு அடிவாங்கனும் தலை விதி இருந்த யாரால தடுக்க முடியும்!!

நினைத்த நினைப்பு அடங்குவதற்குள் இப்படி நினைத்த நேரத்தில் பூ போல பறக்கும் ஒரு கிளர்ச்சி!!

எடுத்த எடுப்பிலேயே என் பரிட்சையில் இந்தப் பெண் தேறி விட்டால்
என்ன அழகு வண்டி ஓட்டுகையில்!!

உடைகளை அழகாக ஒதுக்கி விட்டு முகத்தில் பார்சி இனப்பெண்பொல முக்காடு இட்டுக்கொண்டு!!

கண் மட்டும் தெரியுமாறு காது மடல் வழியே முடி கோதி விட்டு ரியர் விஊ கண்ணாடி மூலம் அடிக்கடி என்னை ஓரக்கண்னால் பார்த்து என் முகம் வெளிறி விட்டதா என்று ஒரு பார்வை வேறு !!

நேரம் போக போக எனக்கும் ஒரு தைரியம் வந்து அழகாக அமர்ந்து  விட்டேன்
நேரம் போனதும் தெரியவில்லை ஏதோ ஊர்வசி & ரம்பை கூட இராவணன் கடத்திச் சென்ற வானூர்தியில் போன ஒரு அனுபவம் அதுவும் பெண் கூட என்றல் சொல்லவா வேண்டும்??

என் கைகள் வேறு பர பர வென்று சும்மாவே இருக்காது வண்டி ஓட்டும் போது
அவர்களின் அசைவுகளுக்கு ஏற்ற  மாதிரி நானும் வண்டி ஓட்டும்
கற்பனையில் இருப்பேன் அது என் இரத்தத்தில் ஊறினது

ஒரே ஒரு கேட்ட பழக்கம் இடுப்பை சுற்றி தட்டாமாலை
போட்டுக்கொண்டால் தான் எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு
அது மட்டும் ரொம்ப கஷ்டப்ப்பட்டு அடக்கிக்கொண்டேன்!!

பிரயாணம் முடிந்ததும் சொல்லியும் விட்டேன் இது ஒன்று தான் குறை என்று
ஒரு வேலை நினைத்திருப்பாள் அடடா வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யாருக்கு தெரியும்!!

குணசீலம் பெருமாள் ஆனால் அருகில் கமலவல்லி நாச்சியார் இல்லை!!
அந்த குறையை தான் இந்தப் பெண் நீக்கி விட்டாலே??

நல்ல வேலை பெருமாள் குடி கொண்டு கல்லாகி விட்டார்
இல்லையென்றால் போதா குறைக்கு பத்மாவதி + நாச்சியாரோடு
இவளையும் கவர்ந்து கொண்டால் என்னை யார் வீடு கொண்டு சேர்ப்பது
அப்படி எதுவும் நடக்க வில்லை !!

போகும் போது இருந்த ஒரு பதற்றம் திரும்பும் போது இல்லை!!
ராணுவ ரகசியம் மாதிரி ஒவ்வொரு முறையும் யாருக்கோ போனில் அப்டேட் கொடுத்தாள்!!அம்மாவாக இருக்கும் என நினைத்தேன்!!

இங்கு சிறுது நேரம் நிறுத்தி நான் கண்டவைகளை நான் சொல்லியே ஆக வேண்டும்!!
சாலை நெடுக பச்சை பசேலென மரம் கொடி
சிறு ஓடை சாலை நீளத்திற்கு சென்றது தண்ணீர் மட்டும் இல்லை!!
குரங்கு இஞ்சி என்று ஒரு மூலிகை செடி மலையேற்றம் போகும் போது பார்த்ததுண்டு அதன் அற்புதம் மழை இல்லா காலங்களில் நுகர்ந்து பார்த்தால் போதும் தாகமே இருக்காது!!

பிரயாணத்தின் போது எனக்கும் நா வரண்டது
காற்றின் அலைகளில் அவள் முடி அலைந்து சிறிது என் உதட்டில் பட்டது
என்ன ஆச்சர்யம் தாகம் காணாமல் போய் விட்டது!!

ஈரம் எங்கே? அவள் கூந்தலிலா? அல்லது மனத்தின் ஈரமா ?
சில்லென்று காற்று என் முகத்தை கூறாக கிழித்தது
வண்டியின் வேகம் அப்படி!!

சிறு குழந்தையை மார்போடு அணைக்கும் தாய் போல அவள் உருவம் என் உடலை மறைத்து தன்னை காற்றுக்கு பலியாக்கி கொண்டாள்!!

திரும்பி வரும் பொது ஒரு இளநீர் கடை
மனதில் உள்ள இனிமை போதும் கொஞ்சம் நாவிற்கும் இனிப்பூட்டுவோம் எனக் கருதி
இரண்டு இளநீர் குடித்தோம்
ஒரு straw  கொண்டு கண் மூடாமல் குடித்தாள்!!
நினைத்துக் கொண்டேன் நீயே ஒரு இளநீராக இருக்கும் போது எதற்கு இந்த ஏமாற்று வேலை???
உன்னையே இளநீர் என்று பருகி இருக்கலாமோ?? ஹும்ம்ம்!!!

உதட்டில் பட்ட இளநீர் குடுவை + straw  எடுத்து சினிமாவில் வரும் மாதிரி collection பாக்ஸ் ல வெச்சுகலாமோன்னு  என்று நினைத்தேன்!!
ரொம்ப சீப் ஆக இருக்கும் என் விட்டேன்

மறுபடியும் பிரயாணம் ஆரம்பித்தோம் சமயபுரம் நோக்கி
இப்போது உண்மையை சொல்லப்போனால்  இது பயணத்தின் பாதையே அல்ல !!

அடடா பயணம் இதனை சிறிதாக முடிந்து விட்டதே என எனக்கும் ஒரு குறை அவளுக்கும் ஒரு ஏக்கம்

என்ன செய்வது சரி விடு வண்டியை சென்னை ரோடு நோக்கி
(இதை படிக்கும் போது கண்டிப்பாக அவள் உதடுகள் பளீரென்று சிரிக்கும்)
உண்மை வலிக்கும் என்பார்கள், நான் சொல்கிறேன் உண்மை இனிக்கும் என்று
சில சமயம் பெண்போல  சிரிக்கும் என்று !!

சற்றே மனதின் ஓரத்தில் ஒரு மின்னல் வந்தது வந்தாகி விட்டது
சமயபுரம் அம்மனை பார்த்து ஒரு கன்னத்தில் போட்டுக்கொண்டால் என்ன?
இந்த முறை மாதிரி எந்த முறையும் entrance  கேட் நோக்கி அலைந்தது இல்லை
பரமபத சொக்கட்டான் மாதிரி சுற்றி சுற்றி வந்தோம்!!

அவளால் சுத்தமாக முடியவில்லை வெயில் சூடு வேறு வேகமாக ஓடி நிழல் தேடிக்கொண்டாள்.. கொஞ்சம் லேசாக எனக்கு கண்களில்  கண்ணீர் பண்ணிக்கத்தான் செய்தது!!

வரை முறைக்கு உள்ளே மட்டுமே என்னால் உதவ முடியும் சினிமா மாதிரி எல்லாம் செய்ய முடியாது (காலில் கால் ஏறி நிற்கும் அளவுக்கு எனக்கு பக்குவம் இல்லை )

நிழல் தேடி அங்கே நிற்க சொன்னேன். ஒரு வழியாக தரிசனம் முடிந்தது!!
அடடா என்ன ஒரு நிகழ்வு.. சாமிய பார்த்த வுடன் எங்களுக்கு நெற்றிக்கண் திறந்து விட்டது.

ஒரு சினிமா பார்த்தல் என்ன ?
ஊரு ஜூட் "இறுதி சுற்று" பாவம் ஏற்கனவே பார்த்துவிட்டாள் போலும்
இருந்தாலும் பலிகடா ஆடு போல தலை ஆட்டினால் எனக்காக
உணர்ச்சி கரமான படம், அதே உணர்வு எனக்குள்ளும் !!

படமும் முடிந்தது..

ஒரு கனமான  நேரம் அங்கு நிலவியது அடுத்து என்ன எனும் போது
ஒரு வெறுமை!!

அடடா வீட்டிற்கு போக வேண்டுமே? யாரும் தேடுவார்களோ ?
வேறு எங்கும் சென்றால் என்ன ? இப்படி ஒரு சிந்தனை..

இருந்தாலும் சமுதாய கோட்பாடுகளுக்கு அப்பால் நமது சிந்தனை போக கூடாது!!

இல்லையேல் இதனை சந்தோஷமும் ஒரு நொடியில் ஒரு கேள்வியில் அழிக்கப்பட்டு விடும் !! விடுவேனா!!

சரி நான் வண்டி எடுத்து தருகின்றேன் வீட்டை நோக்கி போவாம் என முடிவெடுத்தோம்!!

இத்தனைக்கு பிறகும் எனக்கு திருப்தியாக இல்லை என்றாள்
அட அசடே சாப்பிடுவது மட்டும் இல்லை "ட்ரீட்" IT COULD BE ANYTHING என்றேன்!!

சொல்லிவிட்டேன் சீக்கிரம் வந்து விடு என்று சொல்லி விட்டாள் உடனே அவளும் சொன்னால்  எப்போது வேண்டுமானாலும் என்று!!

ஒரு நாள் பயணம் இனிதுடன் முடிய போகிறது என்று தான் இதற்கு முடிவு எழுத நினைத்தேன்!!

ஆனால் இது ஒரு தொடக்கம் !!

இப்படி ஒரு பிரயாணம் யாருக்கும் புரியக்கூடாது என்று தான் மெனக்கட்டு எழுதினேன் ஓட்டுபவர்களுக்கும் அதில் அமர்ந்து இருபவர்களுக்கும் மட்டும் புரிந்தால் போதுமானது!!!

Saturday, January 30, 2016

தியாகத்தின் நிறம் சிகப்பு

உலகம் மாதம் ஒரு முறை பயணிக்க தொடங்கும் !!
சிறு பிராயம் முதலாக என் அம்மா என்னிடம்
இன்னைக்கு மட்டும் நீ சமையல் பண்ணிடுடா!!
நாளைக்கு அண்ணா மொத்தம் இரண்டு நாட்கள்
லீவ் எடுத்து விடுவாள் ஒன்றுமே புரியாது!!
எப்படியோ தட்டு தடுமாறி சமையல் அறிந்து விவரம் புரிந்த காலத்தில்
எதற்கு இப்படி ஒரு சடங்கு என்று தோன்றும்
யார் மீதும் படாமல் ஒதுங்கி கூனி குறுகி நிழல் படாமல் ஓடுவாள்!!
இப்போது நினைத்தால் என் மீதே எனக்கு வெறுப்பு
6 வயதில் சமையல் கரண்டி எடுத்த பொழுது எனக்கு யாரவது இதை பற்றி சொல்லி இருந்தால்
மீதம் உள்ள இரண்டு நாட்களும் அன்னை கரங்களால் அமுதுண்டு இருப்பேன் பேடிகளின் பேச்சை கேட்காமல்!!!
அந்த இரண்டு நாட்கள் அவள் தன்னை குறுக்கிக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை
எனக்கு இன்று வரை பரிட்சயம்
இதைப் பற்றி பேசும் போது அருவருப்பாகவும்
அவஸ்தையை நேரில் பார்க்கும் போது பரிதாபமாகவும் இருக்கும்
சிறு மூளைக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
அவளுக்கு உன்னுடைய அருவருப்போ பரிதாபமோ தேவை இல்லை
ஏனெனில் இந்த சிகப்பு உனக்கு வேண்டுமானால் சிரிப்பாக இருக்கலாம்
இவைதான் பின்னாளைய பிரபஞ்ச தோற்றத்தின் மூலமே
அசடே தெரியாத உனக்கு
அஹம் பிரம்மாஸ்மி என்றால் நானே கடவுள் என்று பொருள்
இவள் உதிர்க்கும் ஒவ்வொரு உதிரமும் தியாகம் என்பதை உணராத வரை
உன்னால் அவள் வலி உணர முடியாது!
பெண்ணே எனக்கு யோனி பூஜை பற்றி தெரியாது காசியில் இன்றும் நடக்கின்றது !!
ஆனால் உறுதியிட்டு சொல்கிறேன் உன்னுடைய வயிற்று வலியும் உதிரப் போக்கும் எனக்கு என் தாயை தவிர
வேறு எதுவும் நியாபகம் வர விடுவதில்லை !! வாழ்க உனது தியாகம் 

Tuesday, January 26, 2016

சட்டப்படி ஒரு கற்பழிப்பு

ஆமாம் உன்னை பெண் பார்க்க வந்தார்களாமே
நட்சத்திரம் கேட்டார்களா??
சொன்னாயா  அந்த மூடர்களிடம் நான் தான் கோள்களின் அரசி என்று
கோள்களின் நட்சத்திரத்தை எந்த ஆரூடம் கணிக்க போகின்றது??
உன்னை பாடச் சொன்னார்களா??
ஸ்வரங்களின் மூலமான உன்னை போல் பாட சொன்னார்களா ஞான சூனியங்கள்!!
எதனை பேரின் காலில் விழுந்தாய் ??
சொன்னாயா அந்த பேடிகளிடம்
நர்த்தனம் ஆடிய கால்களும் கைகளும்
வெறும் வணக்கத்திற்கும் நமஸ்காரத்திற்கும் மட்டுமே பயனாக உள்ளது??
இவை எல்லாம் கேவலம் ஒரு ஆணிடம் இலவசமாக சோரம் போவதற்கும்
அவன் தூங்கி எழுந்து போவதற்கு முன் மொம்மை போல் சிரிப்பதற்கும்
அவன் போன பின் அணிந்த  உள்ளாடை துவைப்பதற்கும்
நான் ஒன்றும் செய்து வைத்த மெழுகு பொம்மை அல்லவே??
எத்தனை முறை இரவு களியாட்டத்திற்கு பின் காலை
நமக்கு யாரவது எடுபுடி ஏவல் செய்யமாட்டார்களா என்று ஏங்கி
நானே எழுந்து நானே குளித்து நானே சமைத்து நானே வீடு சரி செய்து
இப்படி பல நானே தனியாக செய்ததை
பகிர்ந்து கொள்ள மட்டும் வந்து விட்டாயா?
தூங்கும் போது மட்டும் நான் தனியா இருக்க அனுமதி இல்லை
போதுமடா என்னை கசக்கி பிழிந்தது
எனக்குள் இருக்கும் மிருகம் விளித்து பல வருடம் ஆகி விட்டது
ஆனால் வேடுவன் மட்டும் மாறவே இல்லை !!

Monday, January 25, 2016

வீணை வாணியே

வீணை வாணியே ஏன் இந்த ஒரு தலை பட்சம்
வீணை மீட்டும் கைககளால் என்னையும் கொஞ்சம் மீட்டக்கூடதா ?
பிரம்மன் மூன்று தலை நான்கு  கைகளை வைத்து உன்னை கொஞ்சம்
அதிகமாகத்தான் வாளித்து விட்டான்!!
உன்னை சிறை எடுத்தே தீருவது என
கலைவாணியை நோக்கி துதிக்க
என் கனவில் வந்ததோ வெறும் தாமரை மட்டுமே!!
வெற்றிலையில் மை போட்டு பார்த்தால் பிறகு தான் தெரிந்தது
கலைவாணி வீணை கற்றுக் கொள்ள வீதிக்கு வந்து விட்டால் என்று!!
நல்லதோர் வீணை செய்து அதை என்று தேய்ந்த படியே பாட்டு ஒன்று செவி வழி வந்தது !!

என்று தீருமோ இந்த தாகம்

சில   சமயம்  சிரிப்பால்!!  
சில  சமயம்  அழுவாள்!!!  
சில  சமயம்  சுள்ளென்று  சுட்டேரிப்பால்!! 
சில  சமயம்  காமப்  பார்வை  பார்ப்பாள்!!! 
சில  சமயம்  என்ன  சொல்ல  வருகின்றாள்  என்றே  தெரியாது!!  
ஆனால்  அதற்கும் தலையாட்டி  விடுவேன்!!  
சில  சமயம்  ராணி  ஜக்குபாய்  போல  மின்னுவாள்!! 
சரி  என்று  அரசியல்  பேசுவேன் சடாரென்று  வீசியடிப்பால்!!  
உங்களுக்கு  வேற  பொழப்பே   இல்லையால்  என்று!! 
சில  சமயம்  குடும்ப  சமாச்சாரம்  அளாவுவால்!!  
கொஞ்சம்  உரிமையோடு  தயங்கி  அவள்  குடும்பம்  பேசுவேன்!! 
செருப்பால்  அடிக்காத  குறையாய்   வெளியேற்றுவாள்!!!  
8 வருடம்  ஆகியும்  யார்  நீ  என்று கேட்கத் தோன்றும்!! 
இதுதான்  நான்  என்று  சொன்னால்   எனைச்சீப்போ!!  
என்று  விடுவாளோ  என்ற  பயம்  ஆட்டிப்பாக்கும்!!  
காதல்  , திருமணம் , குழந்தை , வேலை 
இவற்றுக்கு  இடையில்  ஒரு  மனப்போரட்டம் 
என்று  தீருமோ  இந்த  தாகம்!!! 

Wednesday, January 20, 2016

காலையில் எழுந்தவுடன்..

நான் பார்த்த மனிதர்களில் இரண்டே ரகம்
சிரிபவர்கள் அழுபவர்கள்
ஆக மொத்தம் ரெண்டு பேறும் ஏதோ ஒரு வகையில் தன் உடல்
மன உடல் வலிமையை இழக்கிறார்கள்
dissolution என்ற ஒரு புள்ளிக்கு யாருமே வருவதில்லை
வருத்தமும் சந்தோஷமும் இல்லாத்  தன்மை
இன்றைய சந்தோசம் நாளைய துக்கம்
நேற்றைய துக்கம் இன்றைய சந்தோசம்
இந்த சுழற்சியை புரிந்து கொண்டால்
எதுவுமே துக்கம் இல்லை
எதுவுமே மகிழ்ச்சியும் இல்லை
யாருமே நண்பர்களும் பகைவர்களும் இல்லை
அழகும் இல்லை அவலட்சணமும் இல்லை
சரியும் இல்லை தவறும் இல்லை
ஆக மொத்தம் கவலைகளை தூக்கி எறியுங்கள்
சுதந்திரமாக இருங்கள் !!!

Tuesday, January 19, 2016

Why do we Cause Germs!!

Germs are everywhere!!
We can cause it!!
Cause they are very very small
You can not see them with your eyes
Because you can not see it with a magnifier glass
Cause they are too too small
They are in your skin
in the broken skin
in your pants
if you dont wash your cloths it will cause Germs.
On the Mat Germs are in there too!!
You got to vacuum clean it because it is important
Cause we have to make this place neat and nice.

We have to broom it too!
We dont want to cause any germs!
Because its good for the place.