Saturday, February 14, 2009

ஒரு ரூபா போட்டா மூணு ரூபா

அ எ ப(அதனால் என்ன பரவா இல்லை) - பாகம் 3
( ஒரு ரூபா போட்டா மூணு ரூபா )
மச்சான்.. விஷயம் தெரியுமா நம்ம ஊருல இடுகாடு இருக்குல்ல..
அதுக்கு பக்கத்துல ஒரு பெரிய 10 ஏக்கர்ல
காலி நிலம் அப்ரூவ்ட் பிளாட் விலைக்கு வருதுடா..
IT park வரபோகுதுடா நல்ல காத்தோட்டமா வசதி
யாரும் disturb பண்ண மாட்டாங்க
24 hours தண்ணி வசதி
பஸ் லாரி ஏன் சில சமயம் ஆம்புலன்ஸ் வசதி கூட கிடைக்கும்
சீக்கிரம் சொல்லு உனக்கு தான் salary hike கிடைச்சிருக்கும் இல்ல
சும்மா just வாங்கி போடுடா ஒரே வருஷத்துல double ஆகிடும் !!!!

இப்படி ஒரு பேச்சு புழங்குவதற்கு ஒரு இடம் என்பது போய் ….
போகும் இடமெல்லாம் ஒரு வீடு..
அதனால் என்ன பரவாயில்லை…
மனிதன் நிரந்தரமாக தூங்கும் இடம் கூட விலை போகும்..
அதனால் என்ன பரவாயில்லை…
யார் சொன்னது
மனிதன் இருந்தாலும் ஆயிரம் பொன் போனாலும் ஆயிரம் பொன்
விளை நிலம் விலை நிலம் ஆகின்றன
அன்றாடம் காய்ச்சிகளுக்கோ வாழ்க்கை வெறுப்பை உமிழ்கின்றன
அதனால் என்ன பரவாயில்லை…
பகட்டான சில ஆயிரம் மனிதர்களின் வாழ்க்கைக்கு
பல ஆயிரம் கோடி மனிதர்களின் வாழ்க்கை விலை பேசப்படுகின்றன …
அதனால் என்ன பரவாயில்லை…
இப்படியே போனால் வாங்கும் பல ஆயிரம் சில மணி துளிகளில்
தொலையும் அபாயம்…
அதனால் என்ன பரவாயில்லை…

No comments:

Post a Comment