Sunday, January 10, 2016

சியாமளா தண்டகம்

ஒரு வரியில் கவிதை
காலையில் எழுந்தவுடன் எனக்கு கவிதை வேண்டும் என்றாள்
கையும் ஓட வில்லை காலும் ஓட வில்லை!!
பிறகு இதனை நாளும் கண்ணாடியில் என்முகத்தை!
மட்டுமே பார்த்து பார்த்து சலித்து போன எனக்கு
இன்ப அதிர்ச்சியாக ஒரு மின்னல் கொடியிடையாள்
கண்ணாடி முன் ஒயிலாக தன்னையே
படம் வரைந்து காட்டினால்??


என் எழுதுகோல்  கையை விட்டு நழுவி போய்
அவள் காலடியில் தொட்டு விட்டு மெட்டியாகி விட்டது!!
அதில் உள்ள மை அவள் பாதகணுவில் பட்டு மருதனியாகி விட்டது!!
மைக்கும் எழுத்தாணிக்கும் கிடைத்த ஆலிங்கனம் எனக்கு கிடைக்காதா??


ஒரு கவிதை எழுத வேண்டும் உன் இதழ் வரிகளில்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் உன் கண் இமைப்பதற்குள்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் வரையப்படாத
ஓவியத்தின் வண்ணங்களாய் சிதறிகிடந்த அவள் கூந்தலில்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் எழுதினால்
இதழ் தீண்டும் இடம் யாவும் இதழ் ஆகும் அதிசயம் உன் முத்தம்
ஒரு வரியில் கவிதை எழுத வேண்டும் எழுத பேனாவும் பேப்பரும் எதற்கு
மையல் கொண்ட உன் கொங்கனி விரல்களும், பரந்த மார்பும் போதாதா!!


இப்படியே நேரம் போனதே தெரியாமல் கனுவுலகில் அதிசயித்து போன என்னை டிரிங் டிரிங் என்று சிணுங்கிய சத்தம் எழுப்பியது பார்த்தால் ஓகே டீல் என்றாள் மறுபடியும் சியாமளா தண்டகம்!!

No comments:

Post a Comment