Monday, January 18, 2016

நிர்மூலம்

சவுதியில் 7 பேர் கற்பழித்த பெண்ணுக்கு 90 கசையடி !
ஏமனில் பெண்ணின் மார்பகங்களை
அறுத்து காம எண்ணம் வராமல் தடுக்க முன்னேற்பாடு !
ஆப்கனிஸ்தானில் கணவனின் மேல் புகார் கொடுத்த மனைவி தான் பரிசுத்தமானவள் என்று நிரூபிக்க தவறியதால் மகன் அப்பா கணவன் என்று குடும்பத்தால் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டாள் !

அடிமை பெண்ணுடன் எப்படி கலவி கொள்ள வேண்டும்
என்று ISIS கட்டுரை வெளியீடு !!
உன் பொண்ண வெளில போகும்
போது காட்டிட்டு போக சொல்லாத !!
அப்புறம் ஏதும் நடந்த அதுக்கு
நான் பொறுப்பு இல்லை என்று
சொல்லும் மகாராஷ்டிரா PM !!
அவ்வளவு  ஏன் நான் இருக்கும்
அமெரிக்காவில் கூட பெண்கள் தனி சம்பளம்
ஆண்களுக்கு தனி மற்றும் அதிகம் !!
ஆணாதிக்கம் என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை !
இந்த சமூகம் பெண் என்று ஒரு வர்க்கத்தை
வரை முறை செய்யவே இல்லை !!
தயவு  செய்து பெண் என்ற பாலை
பிறப்பு  இறப்பு சான்றிதலில்  இருந்து
எடுத்து விட்டு என்ன கொடுமை
வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் !!
 நீங்கள் பெண்ணை கற்பழிக்க வில்லை
ஒரு சமுதாயத்தை உருவாகும்
தாயை நிர்மூலம் செய்கிறீர்கள் !!

No comments:

Post a Comment