Sunday, January 10, 2016

மாரத்தான் ஓட்டம்

மாரத்தான் ஓட்டம் (சிரிக்க சிந்திக்க)
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு

வாரம் இன்னும் இரண்டு நாள்கள் கூட இருந்தாலும்!!
இந்த பெண் விழுந்தடித்து வேலைக்கு போவாள் போல!!

சனி கிழமை ஆபீஸ் உண்டோ என்று கேட்டால் இல்லை ஆப் டுட்டி
சண்டே தான் ஆபீஸ் இன்னிக்கு ஜாலி !! ஹையா என்பாள்!!

காலையில் எழுந்து குளிப்பாளா மாட்டாளா தெரியவில்லை!!
ஆனால் நடந்து ஆபீஸ் போகும் போது தெருக்கோடி வரை சந்தன வாசம்!!
கடை கோடி டீ கடை குப்பு சாமி வரை அவள் தரிசனம் கிடைத்தாகி விடும்!!

கிளம்பும் முன் குட் மார்னிங் என்பாள் அப்புறம் சத்தமே இருக்காது!!
நானாக புரிந்து கொள்வேன் குட்டி பெண்ணுக்கு கடினமான வேலை போல என்று!!

சில சமயம் குட் மார்னிங் சொல்லி ஒரு எமொஜி சிரிப்பு வந்தால்
மேனேஜர் லீவ் என்று அர்த்தம்!!

சில சமயம் சுத்தமாக பேசவே மாட்டாள்!!
அன்று கண்டிப்பா ஊருக்கு போக போகின்றாள் அன்று அர்த்தம்!!

கோயம்பேடு இல்லையேல் தாம்பரம் என்று அன்று முழுவதும்
தூணுக்கும் துரும்புக்கும் அலைந்து ஊருக்கு கிளம்பிட்டேன் என்பாள் !!

அப்படியா  சொல்லவே இல்லையே நீ
என்று பேதமையாய் கேட்டால் நீங்க எப்போதும் இப்படி தான்
மறந்து போய்டீங்களா   என்று பழி என்மேல் விழும்!!

திடீரென டிரெயின் மிஸ் பண்ணிட்டேன் பஸ்ல போறேன் என்பாள்!!
என்னடா இவள் வானத்துக்கும் பூமிக்கும் இப்படி தாவுகின்றாலே!! என பரிதபமாய் இருக்கும்!!

ஒரு முறை வித் அவுட் டிராவல்!!

சரி ஊருக்கு போய் ஒழுங்கா இருக்காளா என்று கேட்டால் அதுவும் இல்லை
பாஸ்போர்ட் வாங்கணும், ப்ளௌஸ் வாங்கணும் டிரஸ் வாங்கணும் மறுபடியும் ஒரு அமைதி
கேட்டால் பதில் இருக்காது நானாக தெரிந்து கொள்ள வேண்டும்
மறுபடியும் கால சக்கரம் சுற்றி வந்து விட்டாலென!!

சரி ஒழுங்காக சாப்பிட்டயா  என்று  கேட்டால் பதில் வராது
சாப்பாடு சரி இல்லை என்று நானே புரிந்து கொள்ள வேண்டும்!!

இப்பதான் சாப்பிட்டேன் ஆனா சுமார் தான் என்றால்
அன்று வேறு எதோ வீட்டு பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டும்!!

திடீரென செல்பி போட்டோ வரும் தேவதை போல புரிந்து விடும்
இன்று யாரோ நல்ல சாப்பாடு போட்டு இருங்காங்க என்று
அன்று கண்டிப்பாக கொஞ்சமாவது கூட நேரம் பேசுவாள் கொஞ்சலாக குழைவாள்!!

தூங்க வேண்டாமா நேரம் ஆகி விட்டது என்றால்
ரொம்ப எதார்த்தமாக நாளைக்கு லீவ் பரவாஇல்லை என்பாள்!!

சரிப்பா எத்தனை நாள் நான் இப்படி உன்னை எளிமையாக கையாண்டு
சுவீகரிக்க முடியும் ஒரு நாள் நான் இந்த  இருவழி பாதையில் இருந்து
விலகி போய்டுவேன் என்றால் பிச்சு பிச்சு என்பாள்!!

பலமுறை அவள் காலை நேரத்தில் கண்டிப்பாக
இன்று நாம் மெசேஜ் அனுப்ப கூடாது என்று கங்கணம்
கட்டி கொள்வேன் கடைசியில் ஒரு வார்த்தை வரும் போது
சே போற போ சின்ன பொண்ணு என்று
நானே வெட்கத்தை விட்டு நல்லா சாப்பிடு தூங்கு
வேலைக்கு போ என்று பல் தெரிய வழியனுப்பி வைப்பேன்!!

சரி கடைசியாக எதற்கு இந்த கட்டுரை முன்னுரையும்
இல்லாமல் முடிவுரையும் இல்லாமல்
மொட்ட தாதா குட்டை விழுந்த கதையா!!
இது என்ன உறவு!! இதற்கு பெயர் தான் என்ன??
யார் இவள்!! அப்படி எதுவும் அவளுக்கு நான்
இது வரை ஒன்றும் செய்து விட வில்லை.
எப்புறம் என்ன ஒரு உரிமை என்னிடம்??
இல்லை செய்ய வேண்டும் என ஏதாவது நிர்பந்தமா??
அவள் எதிர் பார்ப்பு தான் என்ன என்னிடம்?
இல்லை நான் எதை எதிர்பார்கிறேன்??

நான் படித்த அத்துணை அர்த்த சாஸ்திரங்களையும்
பிரயோகித்து யோசித்து விட்டேன் தெரிய வில்லை!!
ஒன்று மட்டும் நிச்சயம் சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அதன் படி ஒரு பெண்ணை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டுமானால்
நீ பெண்ணாக மாறிவிடு அதுதான் ஒரே வழி
அவள்  அழுதால் நீ அழு சிரித்தால் நீ சிரி!!
கொஞ்சினால் கொஞ்சு !!
அவள் வேகத்துக்கு ஈடு கொடு இல்லையேல் கொடுப்பது போல் நடி!!
மாற்றி செய்தால் துன்பம் நிச்சயம்!!

No comments:

Post a Comment