Monday, January 18, 2016

தலைப்பு இல்லா கவிதை

அடர்ந்த இருட்டு அதிலும் ஒரு கருஞ் சிகப்பு மேக மூட்டம்
என்னை சுற்றிலும் டம டம வென மேளச்சத்தம் விடாமல் சீராக கேட்க ! புதிதாய் பிறந்த குழந்தையை பூந்துண்டில்
சுற்றி வைத்தாற்போல் ஒரு கத கதப்பு!
நான் பேசி யாருக்கும் கேட்கவில்லை
மற்றவர் பேசுவது கிணற்றில் போட்ட கல்
போல அதிர்வுடன் என் காதை துளைத்தன !
அடிகடி யாரோ விசும்பி அழும் அதிர்வு
என்னை நிமிடத்திற்கு 72 முறை விக்கல் எடுக்க வைத்தது !
ஒன்றுமே புரியவில்லை எங்கிருக்கிறேன் ?
யார் அழுகிறார்கள் ? நான் எதற்கு விக்கல் எடுத்த மாதிரி அதிர வேண்டும் ?
இதெற்கெல்லாம் மேல் என்னை
யாரோ மெலிய கையிற்றால் வேறு கட்டி போட்டிருந்தார்கள் !
என்ன செய்வது எப்படி வெளியேறுவது
வெளிச்சம் எப்போது வரும்?
ஒன்றிற்கும் விடை கிடைக்காமல்
தேமேன்னு உறங்கிபோனேன் !!
சரி கவிதை கடைசியில் தலைப்பை
சொல்லலாமென்று நினைத்தேன்!
இதனை நேரம் என்னவளின் இதய சிறகில்
சிறை பட்டு இருந்தேன்.
இப்போது மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து
படிக்கவும் என்னவென்று புரியும் !! புரிந்ததா ??
பின் குறிப்பு:
கருஞ் சிகப்பு (இரத்தம் )
மேளச்சத்தம் (இதய துடிப்பு )
மெலிய கையிற்றால் (நாடி நரம்பு )
72 முறை விக்கல் (நாடி துடிப்பு )

No comments:

Post a Comment