Saturday, January 9, 2016

எல்லை தாண்டிய பயங்கர வாதம்

எல்லை தாண்டிய பயங்கர வாதம்
================================
அத்து  மீறிய என் கைகளை எல்லை தாண்டிய பயங்கர வாதம் என்று சிறை செய்தாய் !!
சரி விழிகளோடு விழிகள் சேர்ந்து ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன்! 
சற்றே  இந்தியா  போல ஏமார்ந்தது  சரியென்று சொன்னாய் !!
அமைதிப் பேச்சின் முடிவாக நமது எல்லைகளை வரையறுக்க நமது இதழ்கள் இணைந்து எழுதிக்கொண்டது சமாதான  ஒப்பந்தம் !!
தீயெனச் சுட்டது எனது இதழ்கள் பிறகு தான் தெரிந்து கொண்டேன்! முத்தமிட்டது உன் இதழ்களை அல்ல! அருகினில் இருந்த விளக்கை ! 
கனவு கலைந்தது ! 
மறுபடியும் உன்னை எச்சரிக்கிறேன் உன் 
இதழ்களை மறைத்து புகைப்படம் எடு சுட்டது போதும் எனக்கு ! 

No comments:

Post a Comment