Tuesday, January 26, 2016

சட்டப்படி ஒரு கற்பழிப்பு

ஆமாம் உன்னை பெண் பார்க்க வந்தார்களாமே
நட்சத்திரம் கேட்டார்களா??
சொன்னாயா  அந்த மூடர்களிடம் நான் தான் கோள்களின் அரசி என்று
கோள்களின் நட்சத்திரத்தை எந்த ஆரூடம் கணிக்க போகின்றது??
உன்னை பாடச் சொன்னார்களா??
ஸ்வரங்களின் மூலமான உன்னை போல் பாட சொன்னார்களா ஞான சூனியங்கள்!!
எதனை பேரின் காலில் விழுந்தாய் ??
சொன்னாயா அந்த பேடிகளிடம்
நர்த்தனம் ஆடிய கால்களும் கைகளும்
வெறும் வணக்கத்திற்கும் நமஸ்காரத்திற்கும் மட்டுமே பயனாக உள்ளது??
இவை எல்லாம் கேவலம் ஒரு ஆணிடம் இலவசமாக சோரம் போவதற்கும்
அவன் தூங்கி எழுந்து போவதற்கு முன் மொம்மை போல் சிரிப்பதற்கும்
அவன் போன பின் அணிந்த  உள்ளாடை துவைப்பதற்கும்
நான் ஒன்றும் செய்து வைத்த மெழுகு பொம்மை அல்லவே??
எத்தனை முறை இரவு களியாட்டத்திற்கு பின் காலை
நமக்கு யாரவது எடுபுடி ஏவல் செய்யமாட்டார்களா என்று ஏங்கி
நானே எழுந்து நானே குளித்து நானே சமைத்து நானே வீடு சரி செய்து
இப்படி பல நானே தனியாக செய்ததை
பகிர்ந்து கொள்ள மட்டும் வந்து விட்டாயா?
தூங்கும் போது மட்டும் நான் தனியா இருக்க அனுமதி இல்லை
போதுமடா என்னை கசக்கி பிழிந்தது
எனக்குள் இருக்கும் மிருகம் விளித்து பல வருடம் ஆகி விட்டது
ஆனால் வேடுவன் மட்டும் மாறவே இல்லை !!

No comments:

Post a Comment