Sunday, January 10, 2016

மானே தேனே பொன்மானே

மானே தேனே பொன்மானே
எனப் போற்றி பாடியாகிவிட்டது!!

அழகே அமுதே ஆருயிரே
என்றும் வீழ்த்தியாகிவிட்டது !!

மலரே மொட்டே கற்கண்டே
எனவும் தித்திப்பாக கூறியாயிற்று !!

அழகே அபிதகுசலாம்பாள்
என்றும் எள்ளி நகையாடி விட்டது !!

கன்னுகுட்டி செல்ல குட்டி
மான் குட்டி என்று வழிந்தாயிற்று!!

கண் காது மூக்கு வாய் என்று
பார்ட் பார்ட்டாக அலசி புகழ்ந்தாயிற்று!!

எடுக்க எடுக்க திகட்டாத ஒரே சப்ஜெக்ட்
என்னவென்றால் அது பெண்தானோ!!

ஆனால் கவிஞர் கனிமொழி அப்படி
ஒன்னும் ஆண்களை வர்ணித்த மாதிரி தெரியவில்லை!!

எதிர்பால் வினை ஒன்றை ஒன்று  ஈர்க்கும் என்ற
நமது லோக்கல் தத்துவம் ஏனோ பலிக்கவில்லை !!

இங்கு எப்போதும் ஆண்கள் மட்டுமே வழிவது போல்
இருந்தாலும் நமக்கு அது பற்றி கவலை இல்லை!!

மகாராணியே அதை விரும்பும் போது
இந்த சேவகனுக்கு என்ன கவலை!!!

மறுபடியும் ஆரம்பிப்போம் மானே தேனே பொன்மானே என்று!!

No comments:

Post a Comment